இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை எளிதாக்குவதற்கு பின்வரும் கடிதம் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஷுக்கு அனுப்பப்பட்டது.
June 28, 2022
மாண்புமிகு திரு. அன்டோனியோ குட்டெரஸ்
பொது செயலாளர்
ஐக்கிய நாடுகள்
நியூயார்க், நியூயார்க் 10017
Re: தமிழர் இறையாண்மை உடன்படிக்கைக்கு ஈடாக இலங்கையின் முழு கடனையும் செலுத்த தமிழர்கள் தயார்
மாண்புமிகு திரு அன்டோனியோ குட்டெரஸ் அவர்களுக்கு,
இலங்கைத் தீவில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஒரு உடன்படிக்கையை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.
தமிழர்களின் இறையாண்மையை மீட்பதற்கு இலங்கை ஒப்புக்கொண்டால், இலங்கையின் வெளிநாட்டுக் கடனைச் செலுத்துவதற்கு 52 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராக உள்ளனர். இதனை புலம்பெயர் தமிழர்கள் அண்மையில் இலங்கைக்கு ஒரு முன்மொழிவை முன்வைத்துள்ளனர்.
இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே நீண்டகாலமாக நிலவிவரும் முரண்பாட்டைத் தீர்ப்பதோடு, தமிழர்களுக்கு இறையாண்மையை மீட்டெடுப்பது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் மற்றும் ஏனைய க்வாட் நாடுகளுக்கும் இடையிலான பிராந்திய பதற்றத்தை வெகுவாகக் குறைக்கும். பிராந்திய வல்லரசுகளான சீனாவும் இந்தியாவும் தமிழர்களின் அரசியல் போராட்டத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன, அதே வேளையில் சீனாவின் ஆதரவைப் பெற இலங்கை இந்திய அச்சுறுத்தல்களைப் பயன்படுத்துகிறது.
கடந்த கால மற்றும் தற்போதைய இலங்கை அரசாங்கங்கள் இரண்டும் பணத்திற்காக துறைமுகங்களையும் நிலங்களையும் வர்த்தகம் செய்துள்ளன. இலங்கை சீனர்களுடன் “நிலத்திற்கான பணம்” பரிமாற்றங்களை செய்து வருகிறது. குறைந்தது இரண்டு முக்கியமான மூலோபாய இடங்களான, அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகியன சீனாவிற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த துறைமுகங்களை சீன கட்டுப்பாட்டில் வைத்திருப்பது இந்திய பெருங்கடலில் உள்ள கடல் பாதைகளின் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது. இலங்கையில் குத்தகைக்கு அல்லது விற்பனைக்கு இன்னும் எவ்வளவு நிலுவையில் உள்ளது என்பது எங்களுக்குத் தெரியாது. தற்போதைய பொருளாதார நெருக்கடியைப் பொறுத்தவரை, அது அடிப்படையில் எல்லாமாக விற்பனைக்கு இருக்கலாம்.
இந்த அழுத்தமான பொருளாதாரக் காரணங்களுக்கு அப்பால், தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஒரு உடன்படிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை உதவுமானால், அது பல தசாப்தங்களாக தமிழர்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி சிறையில் அடைத்தல் போன்ற மனித உரிமை மீறல்கள் இதில் அடங்கும்; வெள்ளை வான் படையினரால் தமிழர்கள் கடத்தல், சித்திரவதை மற்றும் கொடூரமான படுகொலை; மற்றும் இலங்கை இராணுவத்தால் தமிழ் பெண்கள் மற்றும் சிறுமிகள் திட்டமிட்டு கற்பழிப்பு, தமிழர்களின் நிலங்களும் வணிக நிறுவனங்களும் இதேபோன்று சட்டவிரோதமான முறையில் அபகரிக்கப்பட்டதோடு, தமிழ் கலாச்சாரத்தை அழிக்கும் மொத்த முயற்சியும் சேர்ந்து கொண்டது. இவை அனைத்தும் சிங்கள பௌத்த ஆட்சியின் ஒட்டுமொத்த இனச் சுத்திகரிப்பு மற்றும் இனப்படுகொலை கொள்கையின் ஒரு பகுதியாகும்.
இலங்கைக்கு வெளியே உள்ள 2 மில்லியன் தமிழர்கள் முதலீடு செய்து தமிழ் தேசத்தை ஜனநாயக ஆட்சியுடன் கட்டியெழுப்ப காத்திருக்கின்றனர். ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் மற்றும் நிலையான மற்றும் செழிப்பான பொருளாதாரத்தை உருவாக்கும் நிறுவனங்களுடன் இலங்கை உட்பட ஒவ்வொரு நாட்டுடனும் ராஜந்திர பாலங்கள் கட்டப்படும். ஒரு இறையாண்மையுள்ள தமிழ் தேசம் இலங்கையின் கடன் நெருக்கடியை விடுவித்து, ஒடுக்குமுறையாளர் என்ற பாத்திரத்தில் இருந்து இலங்கையை விடுவிக்கும். தமிழர் தாயகம், ஐரோப்பிய ஆக்கிரமிப்புக்கு முன்னர் இருந்த நட்பு அண்டை நாடாகத் திரும்பும். இவை அனைத்தும் பிராந்தியத்தை உறுதிப்படுத்த உதவும். ஒரு சுதந்திர தமிழ் அரசு இலங்கை, தெற்காசியாவில் உள்ள நாடுகளின் சமூகம் மற்றும் உலகத்துடன் அமைதியான முறையில் இணைந்திருக்கும்.
தீவில் தமிழர் இறையாண்மையை அறிவிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழர்களாகிய நாம் இப்போதே தயாராக இருக்கிறோம்; சுதந்திரம் மற்றும் சமாதானத்தின் விலை 52 பில்லியன் டாலர் என்றால் இலங்கையின் முழு வெளிநாட்டுக் கடனையும் நாங்கள் மகிழ்ச்சியுடன் அடைப்போம்.
ஊழல், இனவெறி மற்றும் மத சகிப்புத்தன்மையற்ற தலைவர்களுக்குப் பதிலாக வளர்ச்சிக்கு ஆதரவான தலைவர்களுடன் ஸ்ரீலங்கா தனது நாட்டை மறுபரிசீலனை செய்ய ஆரம்பிக்கலாம்.
பொறுப்புள்ள சர்வதேசத் தலைவர் என்ற வகையில் நீங்கள் இலங்கை மட்டுமல்லாது ஏனைய பலம் வாய்ந்த நாடுகளுடன் இராஜதந்திர கலந்துரையாடல் மூலம் இந்த உடன்படிக்கையை எளிதாக்குவீர்கள் என நம்புகிறோம். ஒரு இறையாண்மையுள்ள தமிழர் தாயகம் அப்போதுதான் முழு உலகத்தின் ஆசியுடன் முன்னேற முடியும்.
உங்கள் செயல், இலங்கைத் தீவில் பொருளாதார ஆரோக்கியத்தை மீட்டெடுப்பது மட்டுமல்லாமல், ஒழுங்கையும் நிலையான அமைதியையும் கொண்டுவரும்.
நன்றி,
கையெழுத்திட்டது.
டைரக்டர், பைடனுக்கான தமிழர்கள்
ஆங்கில கடிதத்திற்கான இணைப்பு:https://tamilsforbiden.com/?p=2406